கோவையில் வங்கதேச இளைஞரை பிடித்து விசாரணை
பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளிடம் தொடர்பில் இருந்ததாக, கோவையில் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞரை பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sep 15, 2019, 13:54 IST
| பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளிடம் தொடர்பில் இருந்ததாக, கோவையில் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞரை பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை காந்தி பார்க் பகுதியில் நகைப்பட்டறையில் பணியாற்றி வந்தவர் வங்கதேச இளைஞர் பாரூக் கவுசீர். இவர், பாகிஸ்தான் முஜாகிதீன் என்ற வாட்ஸ்அப் குழுவில் செயல்பட்டு வந்ததாகவும், அந்த குழுவில் உள்ள பலரிடம் தொடர்பில் இருந்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் பாரூக் கவுசீரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், துப்பாக்கி தொடர்பான தகவல்களை பரிமாறி இருப்பதும் தெரியவந்துள்ளது.
Newstm.in
newstm.in