புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்
புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Nov 16, 2019, 00:30 IST
| புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ஜான் லூயிஸ், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக சிவன் அருள், கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா, தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in
newstm.in