காற்று மாசு: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆலோசனை
சென்னையில் நிலவும் காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
Nov 11, 2019, 17:09 IST
| சென்னையில் நிலவும் காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சமீபகாலமாக சென்னையில் காற்றுமாசு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்துவது குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், வேளாண் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதார இயக்குநர் குழந்தை சாமி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
Newstm.in
newstm.in