மின்வாரியத்தில் விரைவில் 5,000 பேர் நியமிக்கப்படுவர்: அமைச்சர்
தமிழகத்தில் தேவையான அளவிற்கு மின் உதிரி பாகங்கள் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
Nov 5, 2019, 16:04 IST
| தமிழகத்தில் தேவையான அளவிற்கு மின் உதிரி பாகங்கள் உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மின் உதிரி பாகங்கள் பற்றாக்குறை என்பது தவறான தகவல் என்றும், புயல் போன்ற சமயங்களில் சமாளிக்க தேவையான மின் உபகரணங்கள் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மின்வாரிய கேங்மேன் பணிக்காக விரைவில் 5000 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் லயன்மேன், வயர் மேன் பதவிகளுக்கு 1000 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in