Logo

சாலையில் கோலம் போட்டதால் 4 பெண்கள் கைது..?

சாலையில் கோலம் போட்டதால் 4 பெண்கள் கைது..?
 | 

சாலையில் கோலம் போட்டதால் 4 பெண்கள் கைது..?

சென்னையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோலம் போட்ட 5 பேரை தடுத்து அழைத்துச் சென்றனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் நடைபெறும் போராட்டங்கள் வன்முறையிலும் முடிந்தன.

சாலையில் கோலம் போட்டதால் 4 பெண்கள் கைது..?

தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெசன்ட் நகரில் கோலம் போடும் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர்.

சாலையில் கோலம் போட்டதால் 4 பெண்கள் கைது..?அவர்கள் கோலத்தில் Against CAA, Against NPR  என எழுதினர். இந்நிலையில்  முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி ஒரு ஆண், 4 பெண்கள் என ஐந்து பேரை தடுத்து நிறுத்தி, போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்களை எச்சரித்து காவல்துறை விடுதலை செய்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP