பள்ளி வாகனம் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சோகம்
திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Oct 24, 2019, 01:50 IST
| திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வாண்டவராயன்பட்டி பகுதியில் 2 வயது குழந்தை மகிழ்மித்ரா மீது தனியார் பள்ளி வாகனம் மோதியது. இதில், அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த குழந்தை மகிழ்மித்ராவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in