திருவண்ணாமலைக்கு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
Nov 24, 2019, 14:03 IST
| திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்கு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அருணாசலேசுவரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 1ஆம் தொடங்குகிறது; 10ஆம் தேதி பரண தீபமும், மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் 25 முதல் 30 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, சென்னையில் இருந்து 500 பேருந்துகளும், விழுப்புரம், திருச்சி, வேலூரில் இருந்து அதிகளவில் பேருந்துகளும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in