Logo

தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு 

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

தொடர் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு 

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமைழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இருவேறு இடங்களில் சுவர் இடிந்து விழுந்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் அருகேயுள்ள முனியங்குறிச்சி கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பூங்கோதை என்பவரும், கும்பகோணம் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மிலட்டூர் கிராமத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் துரைக்கண்ணு என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP