தர்பார் சிறப்புக் காட்சிக்கு தடை! ஏமாற்றத்தில் ரசிகர்கள்!
தமிழ் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சியாக அதிகாலையில் திரையிடுவதற்கு முன்னதாகவே அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது கிருஷ்ணகிரியில் பிகில் படத்தைப் பார்ப்பதற்கு பணம் செலுத்தி டிக்கெட் எடுத்து அதிகாலையிலேயே ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படம் வெளியாவதற்கு தாமதமானதால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாக இருக்கும் தர்பார் படத்திற்கான சிறப்புக் காட்சிக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
தர்பார் படத்தின் ப்ரீமியர் காட்சி நாளை காலை அமெரிக்காவில் வெளியாகவுள்ள நிலையில், இது வரையில் தமிழகத்தில் அதிகாலை காட்சிக் குறித்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
newstm.in
newstm.in