இளம்பிள்ளையில் அரசு போர்வெல்லில் சோப்பு நுரையுடன் வந்த தண்ணீர்
இளம்பிள்ளையில் அரசு போர்வெல்லில் சோப்பு நுரையுடன் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Sep 28, 2019, 17:05 IST
| இளம்பிள்ளையில் அரசு போர்வெல்லில் சோப்பு நுரையுடன் தண்ணீர் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் நடுத்தெரு பகுதியில் அரசு ஆழ்துளை கிணறு உள்ளது. இந்த போர்வெல்லில் 26-ம் தேதி அன்று காலையில் தண்ணீர் சோப்பு நுரையுடன் வந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து பேரூராட்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுகப்பட்டது. அங்கு வந்த பேரூராட்சி பணியாளர்கள் ஒரு வீட்டில் பயன்படுத்தும் கழிவு நீரை போர்வெல் அமைவிடத்தில் விட்டாதால் தண்ணீர் சோப்பு நுரை கலந்து வந்துள்ளது என தெரிவிதுள்ளனர். அதன்பின்பு அந்த பைப்பை பேரூராட்சி பணியாளர்கள் சரி செய்தனர்.
newstm.in
newstm.in