Logo

கோவையில் சுவர் இடிந்து 3 வீடுகள் தரைமட்டம்: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் தரை மட்டமாகியுள்ளது. 17 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
 | 

கோவையில் சுவர் இடிந்து 3 வீடுகள் தரைமட்டம்: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தனியார் சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் தரை மட்டமாகியுள்ளது. 17 பேர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

மேட்டுப்பாளையம் அருகே நடூர் - ஏடிக்காலனி பகுதியிலுள்ள கண்ணப்ப நகரில் தனியாருக்கு சொந்தமான 20 அடி காம்பவுண்ட் சுவர் உள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக, சுவற்றின் உள்பகுதியில் நீர் தேங்கியதால் 20 அடி உயரமுள்ள சுவர் இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. இதில் 3 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. இந்த இடிபாடுகளில் 18க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என கருதி பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2 குழந்தைகள், 12 பெண்கள், 5 ஆண்கள் உட்பட 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரே இரவில் 3 குடும்பங்களை சேர்ந்த 17 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP