Logo

நிலாவின் தொலைவையும் தாண்டி பயணம் செய்த வைகை எக்ஸ்பிரஸ்!

மதுரை - சென்னை என இருமார்க்கமாக இயக்கப்பட்டும் வரும் வைகை எக்ஸ்பிரஸ்ன் 42வது ஆண்டு விழாவை இன்று ரயில் ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
 | 

நிலாவின் தொலைவையும் தாண்டி பயணம் செய்த வைகை எக்ஸ்பிரஸ்!

மதுரை - சென்னை என இருமார்க்கமாக இயக்கப்பட்டும் வரும் வைகை எக்ஸ்பிரஸ்ன் 42வது ஆண்டு விழாவை இன்று ரயில் ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.  

மதுரையிலிருந்து நாள்தோறும் காலை 7.00 மணிக்கு புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ், பகல் நேரத்தில் சென்னைக்குப் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக கடந்த 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் சென்னையிலிருந்து மதியம் 1.40க்குப் புறப்படுகிறது. 1977ல் அறிமுகப்படுத்தும் போது மதுரை மண்டலத்தின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வைகையே.

நாள்தோறும் இந்த ரயிலில் சென்னை-மதுரை, மதுரை-சென்னை மார்க்கமாக சுமார் 7 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். ஒரு வழிப் பயண தூரம் என்று பார்த்தால் 497 கி.மீ. ஆண்டிற்கு 3 இலட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது. இந்த 42 ஆண்டுகளில் தோராயமாக 1 கோடியே 50 லட்சம் கி.மீ. தூரம் பயணம் செய்து சாதனை படைத்துள்ளது. (பூமியிலிருந்து நிலவின் தூரம் 4 இலட்சம் கி.மீ.!)

நிலாவின் தொலைவையும் தாண்டி பயணம் செய்த வைகை எக்ஸ்பிரஸ்!

தொடக்க காலத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் வைகை எக்ஸ்பிரஸ், ரயில்வேயின் பயண அட்டவணையில் இடம்பெறவில்லை. 1980க்குப் பிறகே நாள்தோறும் என, வைகையின் பயண அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜ்-ல் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது வைகை எக்ஸ்பிரஸ்-ல்தான். ஆசியாவிலேயே மீட்டர் கேஜ்-ல் மிக வேகமாகச் சென்ற முதல் ரயிலும் வைகை எக்ஸ்பிரஸ் தான். ஏறக்குறைய நாள்தோறும் பயணிகளால் நிரம்பி வழியும் ரயில்களில் வைகைக்கு முக்கியமான இடமுண்டு.

நிலாவின் தொலைவையும் தாண்டி பயணம் செய்த வைகை எக்ஸ்பிரஸ்!

இந்நிலையில் வைகை ரயில் பயன்பாட்டிற்கு வந்த 42வது ஆண்டு தொடங்குவதையொட்டி, இன்று ரயில் ஆர்வலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும், ஓய்வு பெற்ற வைகை ரயில் ஓட்டுநர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி மகிழ்ந்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP