பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு!
நெல்லையில் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Nov 11, 2019, 15:44 IST
| நெல்லையில் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்க இருந்ததையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தன. அதேபோல் நெல்லையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நெல்லை கடையநல்லூர் அருகே போலீசார் சென்ற பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆயிஷா பீவி என்பவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலும் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
Newstm.in
newstm.in