Logo

ரெங்கநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை தேர் உற்சவம்!

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 | 

ரெங்கநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை தேர் உற்சவம்!

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக தொடங்கியது.  

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் உற்சவம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை தேர் உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ரெங்கநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை தேர் உற்சவம்!

முன்னதாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு வந்துசேர, மேஷ லக்னத்தில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு நம்பெருமாளை வழிபட்டனர். தினசரி பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

ரெங்கநாதர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை தேர் உற்சவம்!

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9ம் திருநாளான  மே 3ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் நம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெறும். தை மற்றும் பங்குனி ஆகிய இரு தேரோட்டங்களில் நம்பெருமாள் மட்டுமே எழுந்தருள்வார், ஆனால் சித்திரை தேரோட்டத்தில் மட்டுமே உபயநாச்சியர்களுடன் அவர் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP