Logo

சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

பழனி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பிகளே அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

சொத்து தகராறில் அண்ணனை கொலை செய்த தம்பிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

பழனி அருகே சொத்து தகராறு காரணமாக தம்பிகளே அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்தவர் தாஜூதீன். இவருக்கு ஜாகீர் உசேன், காதர் உசேன் என 2 தம்பிகள் உள்ளனர். அண்ணன் மற்றும் தம்பிகளிடையே சில நாட்களாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு சொத்து தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ஆத்திரமடைந்த ஜாகீர் உசேன் மற்றும் காதர் உசேன் ஆகியோர் அவரது சகோதரர் தாஜூதீனை கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் தாஜூதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான ஜாகீர் உசேன் மற்றும் காதர் உசேனை தேடி வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP