Logo

பாதுபாப்பு படை வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கஞ்சா வியாபாரி..

திருடியப்போது பிடிக்க முயன்ற பாதுபாப்பு படை வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கஞ்சா வியாபாரி..
 | 

பாதுபாப்பு படை வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கஞ்சா வியாபாரி..

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-15 என்எல்சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன் (30). இவர் என்எல்சி இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் இருந்தபோது அங்கு வந்த மந்தாரக்குப்பம் ஒம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த மணி (எ) கஞ்சாமணி என்பவர் சுரங்க பகுதியில் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு வெளியேற முயற்சித்துள்ளார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் செல்வகுமார், கஞ்சா மணியை பிடிக்க முயற்சித்தபோது அவன் தன் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரன் மீது குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வகுமாரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பாதுபாப்பு படை வீரரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கஞ்சா வியாபாரி..

போலீஸ்காரரை கத்தியை காட்டி மிரட்டியதும், பின்னர் குத்திவிட்டு தப்பிய காட்சியை அருகில் நின்றவர்கள் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் தலைமறைவான கஞ்சாமணியை வலைவீசி தேடி வருகின்றனர். தப்பியோடிய கஞ்சாமணி மீது காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை, திருட்டு வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP