பச்சிளம் குழந்தை விற்பனை: இடைத்தரகர் கைது!
திருச்சி மணப்பாறையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Nov 7, 2019, 17:28 IST
| திருச்சி மணப்பாறையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்ததாக எழுந்த புகாரில் இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை ரூ.1.35 லட்சத்திற்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தன. இது குறித்து நடைபெற்ற விசாரணையில், குழந்தை விற்பனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனை ஊழியர் அந்தோணியம்மாள் இடைத்தரகராக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மருத்துவமனை ஊழியர் அந்தோணியம்மாளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in
newstm.in