ரயில் தண்டவாளம் அருகே இளைஞரின் சடலம்.. காதல் விவகாரத்தில் கொலையா?
நெல்லையில் காணாமல் போனதாக தேடப்பட்ட இளைஞர் தண்டவாளம் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த ராஜா சிங்கை இரண்டு நாட்களாக காணவில்லை. இந்நிலையில் தென்காசி - நெல்லை செல்லும் ரயில் தண்டவாள வழித்தடத்தில் இளைஞரின் உடல் கிடப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், அது காணமல் போனதாக தேடப்பட்டு வந்த ராஜாசிங் என்பது தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை ராஜா சிங் செய்து கொண்டார ? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளம் அருகே வீசப்பட்டாரா ? எனவும் அல்லது காதல் விவகாரத்தில் இச்சம்பவம் நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in