வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை
திருப்பூரில் வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனிருந்த பேரன் தருண் காயங்களுடன் உயிரி தப்பினார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Feb 19, 2019, 17:00 IST
| திருப்பூரில் வயதான தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளியங்காடு புதூரை சேர்ந்தவர்கள் தங்கமுத்து (65) - நாகமணி (55). உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில், இவர்களை கவனித்துக்கொள்ள ஆளில்லாததால் மனமுடைந்த தம்பதி, அவருடயை பேரன் தருணுடன் வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் உயிர் தப்பிய தருண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in