திருச்சி விமானநிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
Aug 6, 2019, 16:49 IST
| சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திற்கு இன்று முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
newstm.in
newstm.in