Logo

தங்கம் கடத்தலில் 2 உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு? புலானாய்வு துறை விசாரணை

திருச்சி விமானநிலையத்தில் 2ஆம் நாளாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 | 

தங்கம் கடத்தலில் 2 உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு? புலானாய்வு துறை விசாரணை

திருச்சி விமானநிலையத்தில் 2ஆம்  நாளாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு விமானம் மூலம் திருச்சி கொண்டுவரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நேற்றைய தினம் விமான பயணிகளிடம் இருந்து சுமார் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலையம் வந்த 130 பயணிகளுக்கும் உடல் பரிசோதனை நடைபெற்றது. இந்நிலையில், தொடர்ந்து 2 வது நாளாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தங்கம் கடத்தலில் திருச்சி விமான நிலையத்தில் உள்ள 2 உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP