கிருஷ்ணகிரி: பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயம்!
ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
Nov 13, 2019, 14:28 IST
| ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து பயணம் செய்த 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in
newstm.in