108 கிலோ ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து 108 கிலோ எடை கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
Nov 15, 2019, 16:35 IST
| வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலின் பூட்டை உடைத்து 108 கிலோ எடை கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
காட்பாடி அருகே வள்ளி மலை சாலையில் உள்ள வி.டி.கே நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. ஊர் பிரசித்திப்பெற்ற இந்த கோவிலில் நேற்றிரவு மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 108 கிலோ எடை கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in
newstm.in