Logo

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான 172 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
 | 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான 172 வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ஜான் வின்சென்ட் மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த பாண்டியன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். அதில், "ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராக தொடர்ந்த காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 172 வழக்குகளையும்  சட்டப்பிரிவு 161 (3)-ன் கீழ்  ஒரே வழக்காக  விசாரிக்க வேண்டும்.  சிப்காட் காவல் நிலையத்தில் பதிந்த குற்ற வழக்கு எண் 191-ஐ நீதிமன்ற பார்வையின் கீழ் சிபிசிஐடி விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.  விசாரணைக்கு பிறகு, மனுதாரரின் கோரிக்கைக்கு ஏற்ப, சட்டப்பிரிவு 161 (3)-ன் படி 172 வழக்குகளையும் ஒரே வழக்கின் கீழ் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP