Logo

சுபஸ்ரீ வழக்கு: காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

பேனர் விழுந்து லாரி மோதி உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கு விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

சுபஸ்ரீ வழக்கு: காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு 

பேனர் விழுந்து லாரி மோதி உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கு விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கில், முன்னாதாக, சுபஸ்ரீ உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி எங்கே? அவர் வெளி நாட்டிற்கு தப்பிவிட்டாரா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், உதவி ஆணையர்கள் விசாரிக்கும் வழக்கை கூடுதல் ஆணையர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை அக்டோபர் 15 ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP