Logo

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை நீட்டிப்பு..

ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 22 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை நீட்டிப்பு..

ராதாபுரம் தொகுதியில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 22 ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவுவை விட 49 வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து திமுகவின் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டதைதொடர்ந்து, மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதனிடையே இன்பதுரை உச்சநீதிமன்றத்தை நாடியதால் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு கடந்த அக்.15ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்ட தடை நவம்பர் 13ஆம் தேதி வரை தொடரும் என தெரிவித்திருந்தது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, "வரும் 22 ஆம் தேதி வரை ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்து உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP