Logo

வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம் பதில்

ஒரு கட்சியின் வேட்பாளர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 | 

வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது: தேர்தல் ஆணையம் பதில்

ஒரு கட்சியின் வேட்பாளர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிக, மதிமுக, கொ.ம.தே.க., ஐ.ஜே.கே., கட்சியை சேர்ந்த நான்கு பேரின் வெற்றியைப்செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், தேர்தல் விதிகளின் படி ஒரு கட்சியில் உறுப்பினராக உள்ள ஒருவர், அந்த கட்சியிலிருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும், இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு கட்சியின் வேட்பாளர் வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது என்ற விதி உள்ளதாகவும், இதை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் எனவும் தெரிவித்தார். 

கட்சியின் உறுப்பினர் அல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது நடைமுறை மோசடி ஆகாதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கில் தொடர்புடைய திமுக, அதிமுக, தேர்தல் ஆணையம் மற்றும் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் நவ.12ஆம் தேதிக்கு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர். 

Newstm.in 

 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP