ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தாக்கல் செய்த அமைச்சர் வேலுமணியின் மனு தள்ளுபடி!
அறப்போர் இயக்கம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்துவதாக அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் வேலுமணி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கம் மீது புகார் தெரிவித்தார்.
மேலும், அறப்போர் இயக்கம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் வேலுமணி மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
newstm.in
newstm.in