Logo

‘முன்கூட்டியே விடுதலை செய்ய ஆயுள் கைதிகள் உரிமை கோர முடியாது’

தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆயுள் கைதிகள் உரிமை கோர முடியாது என்று, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
 | 

‘முன்கூட்டியே விடுதலை செய்ய ஆயுள் கைதிகள் உரிமை கோர முடியாது’

தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய ஆயுள் கைதிகள் உரிமை கோர முடியாது என்று, முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

தமிழக உள்துறை செயலாளர், வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. முன்கூட்டி விடுதலை செய்வது போன்ற மாநில அரசு அதிகாரத்தை நீதிமன்றம் செயல்படுத்த முடியாது; பரிசீலிக்க மட்டுமே அரசுக்கு உத்தரவிட முடியும். ஆயுள் தண்டனை என்றால் ஆயுள் முழுக்க சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளான 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரை ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. முன்கூட்டியே விடுவிக்க வேண்டும் என்று நளினி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP