அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு இறுதி வாய்ப்பு
சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது குறித்த வழக்கில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Nov 16, 2019, 13:30 IST
| சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்துவது குறித்த வழக்கில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில், நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை முழுதாக அமல்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதி வாய்ப்பு வழங்கியது.
மேலும், நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்துவது அதிகாரிகள் கடமை என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
newstm.in
newstm.in