பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது: நீதிமன்றம்
அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளை கிணற்றின் நீரை கொண்டு நிரப்ப வேண்டும், பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது என, அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Aug 20, 2019, 00:40 IST
| அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தை ஆழ்துளை கிணற்றின் நீரை கொண்டு நிரப்ப வேண்டும், பொற்றாமரை குளத்தின் நீரை கொண்டு அனந்தசரஸ் குளத்தை நிரப்பக்கூடாது என, அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொற்றாமரைக் குளத்தின் நீர் இளம்பச்சை நிறத்தில் உள்ளதால் பாசி படிய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்ததையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 22-ஆம் தேதி தாக்கல் செய்யவும் இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in