1. Home
  2. தமிழ்நாடு

உஷார்!! இன்று இதையெல்லாம் செஞ்சா அதிரடி நடவடிக்கை பாயும்!!

உஷார்!! இன்று இதையெல்லாம் செஞ்சா அதிரடி நடவடிக்கை பாயும்!!

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், போகியினை கொண்டாடினர். வீட்டில் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய மற்றும் தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள அர்த்தமாகும் .அன்றைய தினம்,வீட்டில் உள்ள பழைய பொருட்கள், உபயோகமற்ற துணிகள் எரித்து கொண்டாடுவார்கள்.

இதில் டயர், டியூப், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப், காகிதம், பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கும், உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால் இது போன்ற பொருட்கள் எரிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.

மேலும்,காற்றை மாசுபடுத்தும் பொருட்களை எரிப்போர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like