தயாராக இருங்க..! முப்படைகளுக்கு அறிவித்த பென்டகன்!!அதிபர் டிரம்ப் ஆலோசனை!
ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டின் முப்படை தளபதிகள் உடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலைக்குள் இதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என்று கூறுகிறார்கள்.
ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்நிலையில், பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை ஈரான் தாக்க தொடங்கி உள்ளது. அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் நிகழ்த்திய இந்த தாக்குதல் குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைப் பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருக்கும் வார் ரூமில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவின் முப்படை தளபதிகளும் அதிபர் டிரம்ப் உடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் விமான படை தளங்கள், ராணுவ தளங்கள் மீதுதான் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் கூறியதையடுத்து அமெரிக்காவின் எல்லையை சுற்றி இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த தாக்குதலை அடுத்து அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகனும் போர் நடத்த தயார் நிலையில் உள்ளது. இதற்கான ஈராக் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்க படைகளை தயார் நிலையில் இருக்கச் சொல்லி அறிவுறுத்தி உள்ளது.
newstm.in
newstm.in