இன்று வங்கிகள் இயங்காது #BANK STRIKE
இந்தியாவில், பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள் அகில இந்திய அலவில் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜனவரி 8ம் தேதி) போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை வங்கிகளை உள்ளடக்கிய ஆறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பதால், நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் ஜனவரி 8ம் தேதி இயங்காது என்று கூறப்படுகிறது.காசோலை பரிமாற்றம், பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல் உள்ளிட்ட பண பரிமாற்றம் அனைத்தும் முடங்கும் அபாயம் உள்ளது
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பண பரிவர்த்தனைகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக ஏ.டி.எம். சேவையை மட்டுமே நம்பி இருக்கும் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
newstm.in