1. Home
  2. தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர்..  

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர்..  

கோவையில் வீடு புகுந்து 9-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வங்கி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவையை சேர்ந்த ராம்குமார் என்பவர் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமியை நோட்டுமிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததையும் மாணவி மட்டும் தனியாக இருந்ததையும் அறிந்தார். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற ரமேஷ், அங்கு தனியாக இருந்த 9-ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக சிறுமியை மிரட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அச்சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை வன்கொடுமை செய்த ராம்குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், கைதான ராம்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

newstm.in

Trending News

Latest News

You May Like