1. Home
  2. விளையாட்டு

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு: இலங்கை வெற்றி பெறுமா?

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு: இலங்கை வெற்றி பெறுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 35-ஆவது லீக் போட்டியில் இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.

இரு அணி வீரர்கள் விவரம்:

தென்னாப்பிரிக்கா: ஆம்லா, டி காக், டு பிளசிஸ் (கேப்டன்), மார்க்ராம், வாண்டர் டஸ்ஸன், டுமினி, ஆண்டில், பிரிடோரியஸ், மோரிஸ், ரபாடா, இம்ரான் தாஹீர்.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குஷால் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ, குஷால் மெண்டீஸ், மேத்யூஸ், தனஞ்ஜெய டி சில்வா, திசாரா பெரேரா, ஜீவன் மெண்டீஸ், உதனா, மலிங்கா, லக்மல்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like