உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் மனுபக்கர்
சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்களை மனுபக்கர் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
சீனாவில் ஐஎஸ்.எஸ்.எஃப் சார்பில் உலகத்துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பெண்களுக்கான 10.மீ ஏர்பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை மனுபக்கர் 244.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் இந்தியா ஒரு தங்கம் பெற்று அட்டவணையில் 3வது இடத்தில் உள்ளது.
Newstm.in
newstm.in