துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெண்கலம்!
தென் கொரியாவில் நடைபெற்று வரும் 52வது துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரி தங்கம்,அர்ஜுன் சிங் சீமா வெண்கலம் பெற்றுள்ளனர்.
Sep 6, 2018, 16:00 IST
| 52வது துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
தென் கொரியாவின் சங்கவானில் நடைபெற்று வரும் 52 வது ISSF துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு இன்று தங்கம், வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரிக்கு தங்கம் வென்றுள்ளார். அதேபோன்று இந்திய வீரர் அர்ஜுன் சிங் சீமாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
newstm.in
newstm.in