1. Home
  2. விளையாட்டு

கால்பந்து உலகின் பலோன்-டி-ஆர் விருது இந்த வருடம் யாருக்கு?

கால்பந்து உலகின் பலோன்-டி-ஆர் விருது இந்த வருடம் யாருக்கு?

பலோன்-டி-ஆர் விருது இந்த வருடம் ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் கிடைக்க வாய்ப்பு உள்ளது கிறிஸ்டியானோ ரொனால்டோ நம்பி்க்கை தெரிவித்துள்ளார்.

கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக பலோன்-டி-ஆர் விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான விருது இன்னும் வழங்கப்படவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோர் தான் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் இந்த முறை முகமது சாலா, கிரிஸ்மான், வரானே, கலியான் மப்போ ஆகியோரும் பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில், இந்த வருடம் மெஸ்சி விருதை வாங்குவாரா என்பது தெரியவில்லை எனவும், சாலா, மோட்ரிச், கி்ரிஸ்மான், வரானே, மப்பே ஆகியோரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like