1. Home
  2. விளையாட்டு

ஐஎஸ்எல்: சென்னை மீண்டும் படுதோல்வி; மும்பை அசத்தல்!

ஐஎஸ்எல்: சென்னை மீண்டும் படுதோல்வி; மும்பை அசத்தல்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பையில் நடைபெற்ற முக்கிய போட்டியில், சென்னையின் எஃப்.சி அணியை மும்பை சிட்டி எஃப்.சி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்திற்க்கு முன்னேறியது.

கடந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எஃப்.சி அணி, இந்த தொடரில் மிக மோசமாக விளையாடி வருகிறது. தொடர்ந்து பல போட்டிகளில் தோற்று வந்து சென்னை, இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டில் டிரா செய்துள்ளது. மிக சிறப்பாக விளையாடி லீக் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த மும்பை அணியுடன் சென்னை மோதியது.

லீக் சுற்று முடிவுக்கு வரவுள்ள நிலையில், சென்னையின் எஃப்சி அணி, நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது. ஆறுதல் வெற்றி பெற்று ரசிகர்களை உற்சாகப்படுத்த ஆர்வமாக சென்னை அணி களமிறங்கியது. ஆனால் மும்பை அணி மிக சிறப்பாக விளையாடி சென்னைக்கு துவக்கம் முதலே நெருக்கடி கொடுத்தது. மும்பை அணியின் ரைனியர் பெர்னாண்டஸ், 27வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். சென்னையின் அணி, நீண்ட நேரம் போராடி வாய்ப்புகளை உருவாக்க முயற்சி செய்தது. ஆனால் நல்ல கோல் வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை.

முதல் பாதி 1-0 என மும்பைக்கு சாதமாக முடிந்த நிலையில், இரண்டாவது பாதியில் மீண்டும் மும்பை சிறப்பாக விளையாடியது. 55வது நிமிடத்தில், அந்த அணியின் மௌடு சௌகு கோல் அடித்து 2-0 என முன்னிலை கொடுத்தார். கடைசிவரை சென்னையால் கோல் அடிக்க முடியவில்லை. 2-0 என மும்பை வெற்றி பெற்றது. இதோடு தொடர்ந்து 6வது போட்டியை மும்பை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் சென்னை அணி, 11 போட்டிகளில் 8வது முறை தோற்றுள்ளது. இந்த வெற்றியோடு மும்பை இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான சென்னை, ஐஎஸ்எல்-லில் போராடி வருவது, ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like