1. Home
  2. விளையாட்டு

ஐபிஎல் கடைசி லீக் ஆட்டம்: மும்பை அணி பவுலிங்

ஐபிஎல் கடைசி லீக் ஆட்டம்: மும்பை அணி பவுலிங்

ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பைஅணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நடைபெறவுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் (56-ஆவது லீக் ஆட்டம்) மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற மும்பைஅணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டி மும்பையில் 8 மணிக்கு தொடங்குகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

மும்பை அணி: ரோகித் சர்மா (கேப்டன்), டி காக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, பொல்லார்ட், மெக்கிலினேகன், ராகுல் சாஹர், பும்ரா, மலிங்கா.

கொல்கத்தா அணி: சுப்மன் கில், கிறிஸ் லின், உத்தப்பா, ரசூல், தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ரானா, சுனில் நரேன், ரிங்கு சிங், கர்னே, சந்தீப் வாரியர், ப்ரஷித் கிருஷ்ணா.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like