முன்னாள் இலங்கை கேப்டன் ஜெயசூர்யாவின் செக்ஸ் வீடியோ வெளியானது! ரசிகர்கள் அதிர்ச்சி!!
இலங்கை மீண்டும் ராஜபக்ச சகோதரர்கள் கைக்கு மாறியதைத் தொடர்ந்து அவர்களின் எதிரிகள் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். முந்தைய ராஜபக்ச ஆட்சியில் நடந்த குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்த அதிகாரிகளும் இதில் தப்பவில்லை. இந்த வரிசையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு இருக்கிறார் நடிகர் ரஞ்சன் ராமநாயகே. இவர் கண்டியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ரூ.10 லட்சம் ஏமாற்றிய வழக்கில் 2010-ம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். அதற்குப் பிறகு சினிமாவில் நடித்து, அரசியலில் நுழைந்து யு.என்.பி சார்பாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு நெடுஞ்சாலை மற்றும் கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சராக வளர்ந்தவர்.
இவரது வீட்டில் கடந்த 4-ம் தேதி காவல்துறையினர் புகுந்து திடீரென சோதனை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கி லைசென்ஸ் காலாவதியானது என்பதை அறிந்த காவல்துறையினர் நடிகர் ரஞ்சன் வைத்திருந்த சில ஆபாச பட சிடிகளையும் கைபற்றினர். அதுபற்றி ரஞ்சன் கூறும்போது, ‘எல்லோரும்தான் ஆபாசப்படம் வைத்திருக்கிறார்கள், என்றதோடு தான் வைத்திருக்கும் ஆபாசப்படத்தில் முன்னாள் கேப்டன் ஜெயசூரியாவும், ஆளுங்கட்சியை ஆதரிக்கும் ஒரு தொலைக்காட்சி உரிமையாளர் மனைவியும் இருப்பதாக கூறினார். இந்த விவகாரம் இப்போது இலங்கை முழுவதும் பற்றி எரிகிறது.
ஏற்கனவே 3 முறை திருமணம் செய்தவரான ஜெயசூரியா தோன்றும் பல்வேறு பிட்டு படங்களும் மறுபடி இணையத்தில் மறு பதிவேற்றம் செய்யப்பட்டு பரபரப்பாகப் பகிரப்படுகின்றன. இப்போது இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் ஜெயசூர்யா அந்த பதவியில் நீடிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in