1. Home
  2. விளையாட்டு

மலேசியா ஓபன் அரையிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி

மலேசியா ஓபன் அரையிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி

மலேசியா ஓபன் அரையிறுதிப் போட்டியில் பிவி சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தனர்.

கோலாலம்பூரில் நடந்து வரும் மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் அரையிறுதிப் போட்டியில், உலக தரவரிசையில் 3ம் இடம் வகிக்கும் பிவி சிந்து, நம்பர் ஒன் வீராங்கனை தைவானின் தாய் டீஸு யிங்கை எதிர்கொண்டார். 52 நிமிடம் நடந்த இப்போட்டியில் சிந்துவை 15-21, 21-19, 11-21 என்ற கணக்கில் யிங் வென்றார்.

ஆடவர் பிரிவில், 42 நிமிடம் நடந்த போராட்டத்தில், ஸ்ரீகாந்த் கிடாம்பி 13-21 13-21 என்ற நேர்செட்டில் உலக வரிசையில் 11ம் இடத்தில் இருக்கும் மோமோடாவிடம் தோல்வி கண்டார். தொடர்ச்சியாக 21-வது வெற்றியை மோமோடா பதிவு செய்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like