தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பி.வி.சிந்து!
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து, இந்தோனேஷியாவின் கிரகோரியா மாரிஸ்காவை எதிர்கொண்டார். அவர் 23-21, 16-21, 21-9 என்ற செட் கணக்கில் மாரிஸ்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து, ஜப்பானிய வீராங்கனை நசோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார்.
newstm.in