1. Home
  2. விளையாட்டு

இந்தோனேசியா ஓபன் காலிறுதியில் பி.வி. சிந்து


இந்தோனேசியா ஓபன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பி.வி. சிந்து முன்னேறினார்.

ஜகார்தா நகரில் இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் மகளிர் பிரிவில், உலகளவில் 3ம் இடம் வகிக்கும் சிந்து, 36 நிமிடத்தில் 21-17, 21-14 என்ற நேர்செட் கணக்கில், 17ம் இடம் வகிக்கும் சீனாவின் அயா ஓஹோரியை வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்கு முன்னேறிய சிந்து, அந்த ஆட்டத்தில் சீனாவின் பிங்ஜியோவை எதிர்கொள்கிறார்.

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை சாய்னா நேவால், 18-21, 15-21 என சீனாவின் சென் யூபியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

ஆடவர் பிரிவில், இந்தியாவின் ஹெச்.எஸ். பிரணாய் 21-23, 21-15, 21-13 என்ற நேர்செட்களில் சீன தைபேவின் வாங் டீஸு வெய்யை தோற்கடித்து, காலிறுதிக்குள் நுழைந்தார். அடுத்த சுற்றில் பிரணாய், உலக தரவரிசையில் 3ம் இடத்தில் இருக்கும் சீனாவின் ஷி யுக்கியை சந்திக்கிறார்.

சமீர் வர்மா 15-21, 14-21 என நம்பர் ஒன் வீரர் விக்டர் அஸேல்சனிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like