இங்கிலாந்து ஓபன்: அரையிறுதியில் பிவி.சிந்து தோல்வி
ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் கோப்பையில், இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வியடைந்தார்.
ஜப்பான் நாட்டு வீராங்கனை அகானே யாமகுச்சியுடன் நற்று அரையிறுதி போட்டியில் சிந்து மோதினார். உலகின் 2ம் நிலை வீராங்கனையான யாமகுச்சி, 3ம் நிலை வீராங்கனையான சிந்துவுடன் மோதும் 10வது போட்டி இதுவாகும்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த போட்டியில் யாமகுச்சி 21-19, 19-21, 18-21 என சிந்துவை வீழ்த்தினார். துவக்கத்தில் சிந்து மிக சிறப்பாக விளையாடி முன்னிலை பெற்றாலும், அதன்பின், யாமகுச்சி அதிரடியாக விளையாடி அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றினார்.
இறுதி போட்டியில், உலகின் 1 நம்பர் வீராங்கனையான சீன தாய்பேயின் டாய் சூ யிங்குடன் யாம குச்சி மோதுகிறார்.
newstm.in