அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து
2018 இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியாவின் வெள்ளி மங்கை பி.வி. சிந்து, அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளார். காலிறுதியில் ஸ்பெயினின் பேட்டரிஸ் கரேல்ஸை எதிர்கொண்ட சிந்து, 21-12, 19-21, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு தகுதி அடைந்தார். அரையிறுதி போட்டியில் சிந்து, தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனுடன் மோதுகிறார்.
newstm.in