1. Home
  2. விளையாட்டு

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் வெளியேற்றம்

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இந்திய அணிகள் வெளியேற்றம்


ஆசிய அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி, காலிறுதியுடன் வெளியேறியது.

இந்திய பெண்கள் அணி, 1-3 என்ற கணக்கில் சீனா அணியிடம் காலிறுதியில் தோல்வி கண்டது. ஒற்றையர் பிரிவில், பிவி சிந்து 21-13, 24-22 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பெண்கள் அணிக்கு முன்னிலை கொடுத்தார். ஆனால், அணியில் நடந்த மற்ற ஆட்டங்களில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெறாததால், தொடரில் இருந்து வெளியேறியது.

இதே போல் ஆண்கள் அணியும் 1-3 என இந்தோனேஷியாவிடம் வீழ்ந்தது. ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிடாம்பி மட்டும் வெற்றி பெற்று அணியை முன்னிலை படுத்தினார். மற்ற போட்டிகளில் வெற்றி பெற முடியாததால், ஆண்கள் அணியும் காலிறுதியில் தோல்வியை தழுவி வெளியேறி உள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like