இந்திய அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு
வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 154 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கி விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நைம் 36, சர்கார் 30, மகமதுல்லா 30 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் சாஹல் 2, தீபக் சாஹர், கலீல் அகமத், சுந்தர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
newstm.in
newstm.in