ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் சென்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்.
Oct 7, 2019, 19:50 IST
| ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக இன்று பிரான்ஸ் புறப்பட்டு சென்றார்.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் எவியேசன் நிறுவனத்திடம் 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்தியா பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்து விமானத்தில் பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.டோர்டோவில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதல் ரஃபேல் போர் விமானத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெறுகிறார்.
newstm.in
newstm.in